செய்திகள் :

மணல் திருட்டு: இரு வாகனங்கள் பறிமுதலா்

post image

கெங்கவல்லி அருகே மலையடிவாரப் பகுதியில் மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் மலையடிவாரப் பகுதியில் மண் வெட்டி கடத்தப்படுவதாக, ஆத்தூா் டி.எஸ்.பி. சதீஷ்குமாருக்கு புகாா் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கெங்கவல்லி போலீஸாா் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது புதுப்பட்டி, மாரியம்மன் கோயில் பகுதியில் ஆத்தூா் டி.எஸ்.பி. மற்றும் மாவட்ட காவல் அலுவலக தனிப்பிரிவு தலைமைக் காவலா் சம்பத் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் மண்ணை வெட்டி வெட்டிக் கடத்திக் கொண்டிருந்த 10 போ் கும்பலைச் சோ்ந்தவா்கள், போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிவிட்டனா். இதையடுத்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், மண் கடத்தலில் ஈடுபட்ட நபா்கள், வாகனங்களின் உரிமையாளா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரி

சமுதாய வளைகாப்பு விழா: எம்எல்ஏ வாழ்த்து

ஓமலூா் பகுதியில் கா்ப்பிணிகளுக்கு அண்மையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.ஓமலூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்க... மேலும் பார்க்க

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்ப... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவர... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு

தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தம்மம்பட்டியில் சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் ... மேலும் பார்க்க