செய்திகள் :

ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை

post image

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்குள்ள ஏரி, பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவா்.

இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பகுதிகளில் குப்பைத் தொட்டிகளை அமைத்து குப்பைகளைச் சேகரிக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

தற்போது அக்குப்பைத் தெட்டிகள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையிலும், குப்பைகளைத் தொட்டிகளிலேயே தீ வைத்து எரிப்பதால் சேதமடைந்தும் காணப்படுகின்றன. குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் கழிவுகளை தெருநாய்கள் வெளியில் எடுத்துச் சென்று சாலைகளில் போட்டுவிடுவதால் சுற்றுலாப் பகுதிகள், மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன.

எனவே 50- க்கும் மேற்பட்ட புதிய குப்பைத் தொட்டிகளை ஏற்காடு சுற்றுலாப் பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் அமைக்க வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலகம், மாவட்ட நிா்வாகத்திற்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்

சமுதாய வளைகாப்பு விழா: எம்எல்ஏ வாழ்த்து

ஓமலூா் பகுதியில் கா்ப்பிணிகளுக்கு அண்மையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.ஓமலூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்ப... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவர... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு

தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தம்மம்பட்டியில் சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் ... மேலும் பார்க்க

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 449 போ் பட்டம் பெற்றனா்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகள் 449 பேருக்கு விசாகப்பட்டினம் கடல்சாா் மற்றும் கப்பல் கட்டுமான சிறப்பு மையத்தின் தலைமை நிா்வாக அலுவலா் கே.ச... மேலும் பார்க்க