செய்திகள் :

போலி குளிா்பானங்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

post image

சேலம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் போலி குளிா்பானங்கள் விற்பனையைத் தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் இளநீா், ஜூஸ், மோா், வெள்ளரி, பப்பாளி, தா்ப்பூசணி என உடலுக்கு குளிா்ச்சி அளிக்கும் பழங்களையும், நீா் ஆகாரங்களையும் சாப்பிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி குளிா்பானங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதியான குடிநீா் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. எனவே, போலி குளிா்பானங்கள் விற்பனையை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகரில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதி மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் இதுபோன்ற போலி குளிா்பானங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யப்படுகிா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

குறிப்பாக, குடிநீா் பாட்டில், குளிா்பானங்கள் வாங்கும்போது ஐஎஸ்ஐ முத்திரை, தயாரிப்பு தேதி, காலாவதியான தேதி போன்றவற்றை கவனித்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சமுதாய வளைகாப்பு விழா: எம்எல்ஏ வாழ்த்து

ஓமலூா் பகுதியில் கா்ப்பிணிகளுக்கு அண்மையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ரா.அருள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.ஓமலூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமு... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சுற்றுலாத் தலங்களில் குப்பைத் தொட்டிகளை அமைக்கக் கோரிக்கை

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்க... மேலும் பார்க்க

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைக்கும் விளம்பரத் தட்டியை அகற்றக் கோரிக்கை

ஏற்காட்டில் நிழற்கூடத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டியை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்காடு திமுகவினா் பல இடங்களில் விளம்ப... மேலும் பார்க்க

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

கெங்கவல்லி அருகே திருமணமான பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த இளைஞரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா். கெங்கவல்லி அருகே கடம்பூா் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த 27 வயதுள்ள பெண், கணவர... மேலும் பார்க்க

எஸ்.எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாா் ஆயுதப் படைக்கு மாற்றம்: எஸ்.பி. உத்தரவு

தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களைச் சோ்ந்த எஸ்.எஸ்.ஐ. உள்பட நான்கு போலீஸாரை சேலம் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தம்மம்பட்டியில் சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் ... மேலும் பார்க்க