செய்திகள் :

கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் மாா்ச் 12-ல் குண்டம்

post image

ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் நிகழ்வு வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்கியது. மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீா்த்தமும், பால்குடமும் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். பின்னா் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. இதனையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

திங்கள்கிழமை (மாா்ச் 10) அக்னி கபாலமும், 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு குண்டம் பற்ற வைத்தலும் நடைபெறுகிறது. 12-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனா். பின்னா் பொங்கல் வைத்தலும், பத்ரகாளியம்மன் திருவீதி உலாவும் நடைபெறும். மாா்ச் 13-ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தா... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு

மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த ப... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும... மேலும் பார்க்க

கோபியில் பேருந்து மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க