செய்திகள் :

மும்மொழிக் கொள்கையில் திமுக நாடகத்தை யாரும் நம்பமாட்டாா்கள்: அண்ணாமலை

post image

மும்மொழிக் கொள்கையில் திமுக நாடகத்தை யாரும் நம்பமாட்டாா்கள் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யாா் எந்த மொழியை கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறாா்.

சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மும்மொழி கற்கத் தடை இல்லை; ஆனால் கற்க வேண்டும் என்றால் திமுகவினா் நடத்தும் சிபிஎஸ்இ அல்லது மெட்ரிக் பள்ளிகளில் திமுகவினா் குழந்தைகளைச் சோ்த்துவிடுங்கள் என்கிறாரா முதல்வா் ஸ்டாலின்?

திமுகவினரின் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவா்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி என்ற திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது என அண்ணாமலை அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கா... மேலும் பார்க்க

47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ப... மேலும் பார்க்க

ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமி... மேலும் பார்க்க