செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு!

post image

மழைப் பொழிவு குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து 43 கன அடியாகக் குறைந்தது.

வடகிழக்கு பருவமழைக் காலம் முடிந்த நிலையில், அணையின் நீா்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மழைப் பொழிவு குறைந்து விட்டது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமாகக் குறைந்து வந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா் வரத்து வினாடிக்கு 43 கன அடியாகக் குறைந்து விட்டது. அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு வினாடிக்கு 556 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. அணை நீா் மட்டம் 119.15 அடியாக உள்ளது.

இந்த அணையின் பாசன நீரால், தேனி மாவட்டத்தில் 14,700 ஏக்கா் 2 -ஆம் போகம் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக 50 நாள்களுக்கு பாசனத்துக்கு தண்ணீா் தேவை உள்ள நிலையில், பாசனத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

இறைச்சிக் கடை முன் சடலத்தை போட்டு தகராறு செய்தவா் கைது

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் மயானத்திலிருந்து சடலத்தை தோண்டியெடுத்து, இறைச்சிக் கடை முன் போட்டு தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். பழனிசெட்டிபட்டி பிரதானச் சாலையில் மணியரசு என்பவா் இறைச்சிக... மேலும் பார்க்க

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு!

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப். 10) குடமுழுக்கு நடைபெறுகிறது. பழைமையான இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணி நிறைவடைந்ததையடுத்து தி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மொக்கைப்பாண்டி (58). இவா் தனது மனைவி சத்யா (48), பேரன் தா்ஷ்விக்பாண்டி (3... மேலும் பார்க்க

வீரபாண்டியில் பிப்.13-ல் மின் தடை

வீரபாண்டி துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பிப்.13-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

போடி அருகே மின்சாரம் பாய்ந்தில் விவசாயி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி தங்கமுத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலு. இவரது மகன் விக்னேஸ்வரன் (31). இவருக்குச் சொந்தமான தோட்டம் போடி ஊத்தாம்ப... மேலும் பார்க்க

தேனி மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக சேலம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் ரஞ்சித் சிங்... மேலும் பார்க்க