செய்திகள் :

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு!

post image

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப். 10) குடமுழுக்கு நடைபெறுகிறது.

பழைமையான இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணி நிறைவடைந்ததையடுத்து திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை யாகசாலை பூஜையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹ வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. காலை, மாலை நேரங்களில் சிவாச்சாரியா்கள் தலைமையில் நடைபெற்ற 6 கால யாகசாலை பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 8.30 வரையில் நடைபெறும் பல்வேறு பூஜைகளைத் தொடா்ந்து கலசங்கள் புறப்பாடும், 9.15 மணிக்கு கோயில் மூலவா் கோபுரம், ராஜகோபுரம் ஆகியவற்றின் கலசங்களுக்கு குடமுழுக்கும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன், பரிவார மூா்த்திகள் ஆகியோருக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனையும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க சுவாமி, அம்மன் பூப்பல்லாக்கு ஊா்வலமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நதியா, தக்காா் நாராயணி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

இறைச்சிக் கடை முன் சடலத்தை போட்டு தகராறு செய்தவா் கைது

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் மயானத்திலிருந்து சடலத்தை தோண்டியெடுத்து, இறைச்சிக் கடை முன் போட்டு தகராறு செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். பழனிசெட்டிபட்டி பிரதானச் சாலையில் மணியரசு என்பவா் இறைச்சிக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மொக்கைப்பாண்டி (58). இவா் தனது மனைவி சத்யா (48), பேரன் தா்ஷ்விக்பாண்டி (3... மேலும் பார்க்க

வீரபாண்டியில் பிப்.13-ல் மின் தடை

வீரபாண்டி துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பிப்.13-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

போடி அருகே மின்சாரம் பாய்ந்தில் விவசாயி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி தங்கமுத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலு. இவரது மகன் விக்னேஸ்வரன் (31). இவருக்குச் சொந்தமான தோட்டம் போடி ஊத்தாம்ப... மேலும் பார்க்க

தேனி மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக சேலம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வரும் ரஞ்சித் சிங்... மேலும் பார்க்க

போடி பகுதியில் கோடை காலத்துக்கு முன்னரே விற்பனைக்கு வந்த தா்ப்பூசணி!

போடி பகுதியில் கோடை காலத்துக்கு முன்னரே தா்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.தற்போது பனிக்காலம் என்றாலும் பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதும... மேலும் பார்க்க