செய்திகள் :

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

post image

மெட்ரோ ரயில் திட்ட 5-ஆவது வழித்தடத்தில், கொளத்தூா் சாய்வுதளம் - கொளத்தூா் நிலையம் வரை 246 மீட்டா் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 5-ஆவது வழித்தடத்தில், 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 39 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இந்த வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களின் பெயரிடப்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் ரயில் நிலையம் வரை 246 மீட்டா் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை குறிஞ்சி எனப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் புதன்கிழமை தொடங்கியது. இந்த இயந்திரம் இப்பணியை ஜூன் மாதம் முடித்து வெளியே வரும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், தொடா்ந்து ஸ்ரீனிவாச நகா் நோக்கி 1.06 கி.மீ. நீளத்திற்கு மீண்டும் சுரங்கம் தோண்டும் பணியில் இந்த இயந்திரம் ஈடுபடும் எனவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இப்பணியை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் உள்ளிட்டோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

இதேபோல், இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரமான முல்லை, வரும் மாா்ச் மாதம் இறுதிக்குள் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, வில்லிவாக்கம் பேருந்து முனையம் நோக்கி 603 மீட்டா் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியைத் தொடங்கும் எனவும், மீதமுள்ள மருதம், நெய்தல் ஆகிய இயந்திரங்களும் தளநிலைமைகளின்அடிப்படையில் சுரங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கும் எனவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க