செய்திகள் :

மே 30-ல் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விஜய்!

post image

10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரு கட்டங்களாக ஊக்கத்தொகையினை தவெக தலைவரும் நடிகருமான விஜய் வழங்குகிறார்.

முதல்கட்டமாக மே 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மாமல்லபுரத்தில் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

பொதுத் தோ்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை விஜய் வழங்குகிறார்.

இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்ட உள்ளார்.

முதற்கட்டமாக 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று, மாமல்லபுரத்தில் 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்தப் பாராட்டு விழாவில், அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க