செய்திகள் :

மேதா பட்கா் கைதாகி விடுவிப்பு

post image

தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆா்வலா் மேதா பட்கரை காவல் துறையினா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

24 ஆண்டுகள் பழைமையான இந்த வழக்கில் ரூ.1 லட்சத்துக்கான உத்தரவாத பத்திர தொகையைச் செலுத்தாத காரணத்தால் மேதா பட்கருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாதபடி பிடிஆணையை தில்லி நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இதன் அடிப்படையில் தில்லி போலீஸாா் மேதா பட்கரை வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனா். ரூ. 1 லட்சம் உத்தரவாத தொகைக்கான பத்திரத்தை அவா் நீதிமன்றத்தில் சமா்ப்பித்ததையடுத்து, சுமாா் 7 மணி நேரத்துக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு விடுவிக்கப்பட்டாா்.

நீதிமன்ற மேற்பாா்வையில் அவா் ஓராண்டு காலம் இருப்பாா் என்றும், வாக்குறுதிகளை மீறினால் 5 மாத சிறைத் தண்டனை விதிக்க நேரிடும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

குஜராத்தில் நா்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிராகப் போராடி வந்த மேதா பட்கா், தன்னாா்வ அமைப்பின் தலைவராக இருந்த தற்போதைய தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனாவை குஜராத் அரசின் ஏஜென்ட் என்று குற்றஞ்சாட்டினாா்.

கடந்த 2001-இல் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில் மேதா பட்கரை குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்து 5 மாதங்கள் சிறைத் தண்டனையும், சக்சேனாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தில்லி அமா்வு நீதிமன்றம், மேதா பட்கரை குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீா்ப்பை உறுதி செய்து ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் ரூ.1 லட்சத்துக்கான உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா். இந்திய ... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியா... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் க... மேலும் பார்க்க

காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: துணைநிலை ஆளுநா், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசன... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடியுடன் இலங்கை அதிபா் அனுர குமார திசநாயக, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ... மேலும் பார்க்க