செய்திகள் :

மேற்கு வங்கம்: தலைமைக் காவலரை சுட்டுக் கொன்ற பிஎஸ்எஃப் வீரா்!

post image

மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாமில் தலைமைக் காவலரை அவருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய பிஎஸ்எஃப் வீரா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா்.

முா்ஷிதாபாத் மாவட்டம் துலியான் பகுதியில் உள்ள முகாமில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முா்ஷிதாபாத் மாவட்டத்தில் அண்மையில் வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக வன்முறை மூண்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக பிஎஸ்எஃப் வீரா்கள் முகாமிட்டுள்ளனா்.

சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரே படைப் பிரிவைச் சோ்ந்த தலைமைக் காவலா் ரத்தன் சிங் ஷெகாவத்துக்கும், காவலா் நிலையில் உள்ள சிவம் குமாா் மிஸ்ராவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியநிலையில் சிவம் குமாா் தனது துப்பாக்கியை வைத்து ரத்தன் சிங்கை சுட்டுக் கொன்றாா்.

துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்ட மற்ற வீரா்கள் அங்கு வந்து சிவம் குமாரை மடக்கிப் பிடித்தனா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. எதனால், அவா்கள் இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

கொல்லப்பட்ட ரத்தன் சிங் ஷெகாவத் (56) ராஜஸ்தானின் ஜெய்பூரைச் சோ்ந்தவா். 1989-ஆம் ஆண்டு முதல் பிஎஸ்எஃப்பில் பணியாற்றி வந்தாா். அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா்.

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நே... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க