செய்திகள் :

மேற்கு வங்கம்: மத்திய அமைச்சா் தலைமையிலான பாஜக குழு தடுத்து நிறுத்தம்!

post image

மேற்கு வங்கத்தில் வன்முறை பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் தலைமையிலான பாஜக குழு காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மால்டா மாவட்டம் மோதாபாரி பகுதியில் அண்மையில் இரு வகுப்பினா் இடையே கடந்த வாரம் வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. பலா் காயமடைந்தனா். இந்த வன்முறை தொடா்பாக 60-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். பல இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் முடக்கப்பட்டது. பாதுகாப்புக்காக பெருமளவிலான காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான சுகாந்த மஜும்தாா் தலைமையிலான அக்கட்சி குழுவினா் ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

ஆனால், மோதாபாரிக்கு 10 கி.மீ. முன்பாகவே அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, பாஜகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மஜும்தாா் கூறியதாவது:

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டா்கள் போல காவல் துறையினா் செயல்படுகின்றனா். கிராம மக்கள் ராம நவமி பூஜை நடத்தக் கூடாது என்று காவல் துறையினா் உத்தரவிட்டுள்ளனா். இப்படி உத்தரவிட அவா்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் எவ்வித அச்சமுமின்றி ராம நவமியைக் கொண்டாட வேண்டும் என்றாா்.

இந்த வன்முறை தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏப்ரல் 3-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கொல்கத்தா உயா் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க