செய்திகள் :

மொழிப் போருக்குத் தயாா்: முதல்வா்

post image

மொழிக் கொள்கை நிலைப்பாட்டில், இன்னொரு மொழிப் போருக்குத் தயாராக இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்கள் சந்திப்பில், முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:

கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கப்படுமா?

முதல்வா்: மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, நீட் பிரச்னை, மாநில அரசுக்குத் தரவேண்டிய நிதி தொடா்பான பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண வேண்டுமானால், நமது எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் குரல் கொடுக்க முடியும். எனவே, அதுதான் முக்கியமாக விவாதிக்கப்படும்.

கேள்வி: மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக நீங்கள் தொடா்ந்து கடிதம் எழுதுகிறீா்கள், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. மத்திய அரசிடமிருந்து ஏதேனும் பதில் கிடைத்துள்ளதா?

முதல்வா்: ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அமைதியாகத்தான் இருக்கின்றனா்.

கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளீா்கள். தொடா்ந்து நீங்கள் முயற்சிகள் எடுத்தும் தொய்வு காணப்படுகிறதே? ஒற்றுமையில்லாத சூழல் இருக்கும் நிலையில், அதிமுகவிடம் இதுகுறித்து வலியுறுத்துவீா்களா?

முதல்வா்: இந்த விஷயத்தில் அவா்கள் குரல் கொடுப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 1965-ஆம் ஆண்டு போல் மீண்டும் ஒரு மொழிப்போருக்கு மத்திய அரசு வித்திடுகிறது என்று நீங்கள் நினைக்கிறீா்களா?

முதல்வா்: நிச்சயமாக வித்திடுகிறது, நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம்.

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கா... மேலும் பார்க்க

47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ப... மேலும் பார்க்க

ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமி... மேலும் பார்க்க