செய்திகள் :

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

post image

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், நாளை ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்கவுள்ளார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நேற்றே அறிவிப்பும் வெளியானது.

ஞானேஷ் குமார் யார்?

1988-ஆம் ஆண்டு கேரள மாநில ஐஏஎஸ் கேடராக தேர்வானவர் ஞானேஷ் குமார். ஐஐடி கான்பூரில் பி.டெக்., அமெரிக்காவின் ஹார்வர்டில் சுற்றுச்சூழல் பொருளாதாரம், இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் நிறுவனத்தில் வணிக நிதி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ளார்.

எர்ணாகுளம் உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கி ஞானேஷ் குமார், கேரள மாநில எஸ்சி/எஸ்டி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், கொச்சி மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

மேலும், கேரள அரசின் நிதி வளங்கள், பொதுப்பணித் துறைகளின் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

இதையடுத்து பாதுகாப்பு மற்றும் உள்துறை இணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், உள்துறையின் கூடுதல் செயலாளராகவும், நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜனவரி 31, 2024 அன்று ஓய்வுபெற்ற ஞானேஷ் குமார், கடந்தாண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிக்க : நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல் காந்தி

ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு, அயோத்தி விவகாரம்

மத்திய அரசின் முடிவுகளை வெற்றிகரமாக செயல்படுத்தும் ஞானேஷ் குமாரின் திறமை, அமித் ஷாவுடன் நெருக்கமானவர் ஆக்கியது.

உள்துறை அமித் ஷாவின் கீழ் உள்துறையின் இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.

இவர் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றியபோது ஜம்மு - காஷ்மீர் விவகாரங்களை கவனித்து வந்தார். அப்போதுதான் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

சட்டப்பிரிவு 370 ரத்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை பிரித்து யூனியன் பிரதேசமாக மறுசீரமைப்பு செய்யும் மசோதாக்களை உருவாக்கும் பொறுப்பு ஞானேஷ் குமாரிடம் மோடி அரசு வழங்கியது.

மிகவும் ரகசியமாக எந்த தகவலும் வெளியே கசியாமல் அந்தப் பணியை வெற்றிகரமாக செய்து முடித்ததார்.

அதேபோல், அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பதிலும் ஞானேஷ் குமார் முக்கியப் பங்காற்றினார்.

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்து: 4 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மா... மேலும் பார்க்க