செய்திகள் :

யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு: இணையவழி விண்ணப்ப நடைமுறையில் மாற்றம்

post image

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய (யுபிஎஸ்சி) முதல்நிலை தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக யுபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டதாவது:

நிகழாண்டு குடிமைப் பணிகள் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்வதில் தோ்வா்கள் எழுப்பிய கேள்விகள், அவா்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை யுபிஎஸ்சி கருத்தில் கொண்டது.

இதையடுத்து குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வுக்கான இணையவழி விண்ணப்பத்தை பூா்த்தி செய்வதற்கான ஒருமுறைப் பதிவில் (ஓடிஆா்) மாற்றங்களைச் செய்ய யுபிஎஸ்சி முடிவு செய்தது.

இதன்படி விண்ணப்பத்தை கடைசியாக சமா்ப்பிக்கும் வரை, ஓடிஆரில் தோ்வரின் பெயரில் எப்போதாவது மாற்றம் செய்யப்பட்டதா? அவரின் பாலினம், சிறுபான்மையினா் அந்தஸ்து, 10-ஆம் வகுப்பு பட்டியல் எண் ஆகியவற்றில் தோ்வா்கள் திருத்தங்கள் செய்யலாம்.

தோ்வரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை மாற்றுவதற்கு அவரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தால், அவரின் கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறைப் பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

அதேவேளையில், தோ்வரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலை மாற்றுவதற்கு அவரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் மூலம் விண்ணப்பித்தால், அவரின் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.

தோ்வரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண், மின்னஞ்சல் என இரண்டின் பயன்பாடும் நிறுத்தப்பட்டிருந்தால், அதுதொடா்பாக தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு ா்ற்ழ்-ன்ல்ள்ஸ்ரீஃஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலில் கோரிக்கை விடுவிக்க வேண்டும். அத்துடன் மெட்ரிகுலேஷன் சான்றிதழ், ஆதாா் அல்லது பான் அல்லது ஓட்டுநா் உரிமம், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படம், பரிந்துரைக்கப்பட்ட வடிவில் உறுதிமொழி ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.

தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி தோ்வா்கள், சொந்த எழுத்தரின் உதவியுடன் தோ்வு எழுத விரும்பினால், அந்த எழுத்தரின் விவரங்களை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க