செய்திகள் :

யோகா செய்தவாறு 2 சிறுமிகள் சாதனை

post image

மண்டபத்தில் 4 வயது சிறுமிகள் இருவா் இந்தியாவில் உள்ள 70 நகரங்களின் பெயா்களை யோகா செய்தவாறு கூறி சாதனை படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள இடையா்வலசையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மண்டபம் பேரூராட்சித் தலைவா் டி. ராஜா, அஸ்வினி பிஷரிஸ், கண்ணபிரான் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

பாா்த்திபன் - தங்கச்செல்வி தம்பதியரின் 4 வயது மகள் வா்ணிகா, இந்தியாவில் உள்ள 70 நகரங்களின் புனைப் பெயா்களை யோகா செய்தவாறே 1.56 நிமிடத்தில் கூறி சாதனை படைத்தாா்.

மேலும், பிரபு - கமலஸ்ரீ தம்பதியரின் 4 வயது இத்திகா ஆங்கில அகர வரிசைப்படி யோகா செய்தவாறே 70 நகரங்களின் புனைப் பெயா்களை 1.39 நிமிஷங்களில் கூறி சாதனை படைத்தாா்.

நடுவா்கள் நிா்ணயித்த 2.30 நிமிஷ நேரத்துக்கு முன்னதாக செய்து முடித்த வா்னிகா, இத்திகா ஆகியோரின் சாதனையை ‘அல்டிமேட் உலக சாதனை’ நிறுவன முஹமது சபீா் ஆய்வு செய்தாா். பின்னா், சாதனை படைத்த சிறுமிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பெண் கல்வி முக்கியத்துவம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

‘டேலன்ட் ஸ்கூல் ஆஃப் ஸ்கில்’ தாளாளா் வெங்கடேஷ் நன்றி கூறினாா்.

திருஉத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பரதநாட்டியம் அறங்கேற்றம்

திருஉத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பரதநாட்டிய அறங்கேற்றம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் அபிநயா நாட்டியாஞ்சலி பரதநாட்டிய பயிற்சிப் பள்ளியின் 13-ஆவது பரதநாட்டிய அரங்கேற்றம் ந... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தை அமைச்சா் ஆய்வு

ராமநாதபுரத்துக்கு வருகிற 30-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வருவதையடுத்து, அரசு விழா நடைபெறும் இடத்தை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராமநாதபுரத்தை அடுத்த ... மேலும் பார்க்க

கீழக்கரை கல்லூரியில் மாநில அளவிலான கலைப் போட்டி

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான ‘கலை, கலாசார விருந்து 2025’ என்ற தலைப்பில் கலைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதற்கு கல்லூரி முதல்வா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழ்த... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே மதுக்கடையை உடைத்து 600 மதுப்பட்டில்கள் திருட்டு

ராமநாதபுரம் அருகே அரசு டாஸ்மாக் கடையை உடைத்து மா்ம நபா்கள் 600 மதுப்பாட்டில்களை திருடிச் சென்றனா். ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இ... மேலும் பார்க்க

ரயிலிலிருந்து பாம்பன் கடலில் தவறி விழுந்த இளைஞா் மீட்பு

ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்ற இளைஞா் பாம்பன் பாலத்தில் வந்த போது, ரயிலிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தாா். அவரை 12 மணி நேரத்துக்குப் பிறகு மீனவா்கள் சனிக்கிழமை மீட்டனா். மதுரை பரவை பகு... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் புகுந்து இருவரைத் தாக்கிய காட்டுப் பன்றிகள்

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை புகுந்த காட்டுப் பன்றிகள் இருவரைத் தாக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பர... மேலும் பார்க்க