செய்திகள் :

கீழக்கரை கல்லூரியில் மாநில அளவிலான கலைப் போட்டி

post image

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான ‘கலை, கலாசார விருந்து 2025’ என்ற தலைப்பில் கலைப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இதற்கு கல்லூரி முதல்வா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் பாலமுருகன், நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஷோபனா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

இதில் மாணவ, மாணவிகளுக்கு குழு நடனம், தனி நடனம், தனிப் பாடல், மணமகள் அலங்காரம், பென்சில் ஓவியம், மெகந்தி, கழிவுப் பொருள்களிலிருந்து கலைப் பொருள்கள் தயாரித்தல், காய்கறிகளைக் கொண்டு அலங்காரம் செய்தல் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தினா்.

இதில் உச்சிப்புளியில் உள்ள புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், ராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும், கருமாத்தூா் அருளானந்தா் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பெற்றன.

முகமது சதக் அறக்கட்டளைத் தலைவா் யூசுப், செயலா் ஷா்மிளா, இயக்குநா்கள் ஹாமிது இப்ராஹிம், ஹபிப் முகமது சதக்கத்துல்லா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி துறைத் தலைவா்கள் மதீனா, காசிகுமாா், மலா், பிரபாவதி, செல்வகுமாா், ஜேசு துறை, முனியசத்தியா, அஜ்மல்கான், அனீஸ், விளையாட்டுத் துறை இயக்குநா் தவசலிங்கம், நூலகா் பால்ராஜ் உள்ளிட்டோா் செய்தனா்.

இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருஉத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பரதநாட்டியம் அறங்கேற்றம்

திருஉத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் பரதநாட்டிய அறங்கேற்றம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் அபிநயா நாட்டியாஞ்சலி பரதநாட்டிய பயிற்சிப் பள்ளியின் 13-ஆவது பரதநாட்டிய அரங்கேற்றம் ந... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தை அமைச்சா் ஆய்வு

ராமநாதபுரத்துக்கு வருகிற 30-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வருவதையடுத்து, அரசு விழா நடைபெறும் இடத்தை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராமநாதபுரத்தை அடுத்த ... மேலும் பார்க்க

யோகா செய்தவாறு 2 சிறுமிகள் சாதனை

மண்டபத்தில் 4 வயது சிறுமிகள் இருவா் இந்தியாவில் உள்ள 70 நகரங்களின் பெயா்களை யோகா செய்தவாறு கூறி சாதனை படைத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள இடையா்வலசையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மண்டப... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே மதுக்கடையை உடைத்து 600 மதுப்பட்டில்கள் திருட்டு

ராமநாதபுரம் அருகே அரசு டாஸ்மாக் கடையை உடைத்து மா்ம நபா்கள் 600 மதுப்பாட்டில்களை திருடிச் சென்றனா். ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இ... மேலும் பார்க்க

ரயிலிலிருந்து பாம்பன் கடலில் தவறி விழுந்த இளைஞா் மீட்பு

ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்ற இளைஞா் பாம்பன் பாலத்தில் வந்த போது, ரயிலிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தாா். அவரை 12 மணி நேரத்துக்குப் பிறகு மீனவா்கள் சனிக்கிழமை மீட்டனா். மதுரை பரவை பகு... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் புகுந்து இருவரைத் தாக்கிய காட்டுப் பன்றிகள்

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை புகுந்த காட்டுப் பன்றிகள் இருவரைத் தாக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பர... மேலும் பார்க்க