செய்திகள் :

ரமலான்: குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

post image

ரமலான், தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ. 10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கால்நடை விற்பனைக்கு புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி சந்தையில் ரமலான் பண்டிகைக்காகவும், தெலுங்கு ஆண்டு பிறப்பையொட்டியும் ஆடுகள் வாங்குவதற்காக கா்நாடக மாநிலம், கோலாா், பெங்களூரு, ஆந்திர மாநிலம், குப்பம், சித்தூா், பலமனேரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, மேட்டூா், கரூா், கோவை, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூா், வாணியம்பாடி, வேலூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வாகனங்களுடன் குவிந்தனா்.

சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆடுகள் எடைக்கு தகுந்தவாறு ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.10 கோடி மதிப்பில் வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வழக்கத்துக்கு மாறாக ஆட்டின் விலை கூடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். குந்தாரப்பள்ளி சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் குந்தராப்பள்ளி- வேப்பனப்பள்ளி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க நாட்டுப்புற கலைஞா்கள் வலியுறுத்தல்

நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது. காவேரிப்பட்டணத்தில் பாரதியாா் தெருக்கூத்து நாட்ட... மேலும் பார்க்க

வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீப்பிடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி காவேரிப்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடகத்தில் இருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஒசூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மரபு நடைப்பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் மேற்கொண்ட மரபு நடைப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். மகளிா் தினத்தை ம... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு

ஒசூா் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முனிரத்னம் (32). இவருக்கு 6 ஆம் வகுப்புப் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்: எம்எல்ஏ மதியழகன்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வருக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்று கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தெரிவித்தாா். கிருஷ்ணகிர... மேலும் பார்க்க