பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லாமல் அரிசி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமியா்களுக்கு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமியா்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இதை ஏற்று, நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாள்களுக்கு மட்டும் பச்சரிசியை விலையில்லாமல் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 7,920 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.18.41 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.