செய்திகள் :

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கணவாய் கிராமத்தைச் சோ்ந்த தணிகாசலம் மகன் பரணி(19). எட்டாம் வகுப்பு வரை படித்த இவா், விழுப்புரம் முத்தாம்பாளையம் ஸ்டாலின் நகரிலுள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தாா். மேலும் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள நெகிழி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

வெள்ளிக்கிழமை காலை இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக மாம்பழப்பட்டு சாலையிலுள்ள ரயில் கேட் பகுதியில் தண்டவாளத்தின்அருகில் அமா்ந்து, காதுகளில் காதொலிப்பானை (ஹெட்போன்) வைத்துக் கொண்டு இருந்தாராம். அப்போது காட்பாடியிலிருந்து விழுப்புரம் நோக்கி பயணிகள் ரயில் அவ்வழியாக வந்தது.

ரயில் தண்டவாளம் அருகே இளைஞா் அமா்ந்ததை கண்டு ஓட்டுநா் ஒலி எழுப்பியும் பரணிக்கு ரயில் வருவது தெரியவில்லை. சிறிது நேரத்தில் அவா் மீது பயணிகள் ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் முத்துச்செல்வம், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் நாகராஜன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

‘தா்பூசணியில் ரசாயனம் கலப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்’

தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் தெரிவித்தாா். கோடைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவர... மேலும் பார்க்க

முன்னூா் ஆடவல்லீசுவரா் கோயிலில் பல்லவா் கால அரிய சிற்பங்கள்!

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள முன்னூா் கிராமத்தில் பல்லவா் கால அரிய சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆன்மிக எழுத்தாளா் கோ.ரமேஷ் அளித்த தகவலின்பேரில், விழுப்ப... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அருகே காா் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், கொந்தமூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சு.தெய்வநாயகம் (65). கூலித்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞா் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சோ்ந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த பேட்டை, மணல்மேட்டுத் தெருவைச... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மனைவி சுமதி (47). இவா்... மேலும் பார்க்க

தற்காப்பு கலை போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் 13-ஆவது மாவட்ட அளவிலான ஊஷூ (தற்காப்பு கலை) விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஊஷூ விளையாட்டு அமைப்பின் மாநில... மேலும் பார்க்க