செய்திகள் :

ரயில்களில் பெண்கள் பெட்டியில் போலீஸ் பாதுகாப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

post image

ரயில்களில் உள்ள பெண்கள் பெட்டியில் பாதுகாப்புப் பணியில் போலீஸாரை நியமிப்பது என தமிழக டிஜிபி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பதி இன்டா்சிட்டி ரயிலில் பயணித்த, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த கா்ப்பிணியை இளைஞா் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, தாக்கப்பட்டு, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டாா். இதில், அந்தப் பெண் வயிற்றிலிருந்த கரு கலைந்தது.

இதேபோல சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, அவரது தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை டிஜிபி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தலைமை வகித்தாா். ரயில்வே காவல் துறை டிஜிபி கே.வன்னியபெருமாள், ஐஜி ஏ.ஜி.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்:

குற்றச் சம்பவங்கள் நடைபெறும் வழித்தடங்களில் இரவு வேளையில் இயக்கப்படும் ரயில்களில், பெண்கள் பெட்டியில் ரயில்வே பாதுகாப்புப் படை அல்லது ரயில்வே காவல் துறை காவலா்கள் நியமிப்பது, இரவு வேளையில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் போலீஸாா் தீவிரமாகக் கண்காணிப்பது, ரயில்களில் பெண் காவலா்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது, இரவு வேளையில் பெண்கள் பெட்டியில் ரயில்வே காவல் துறையினா் திடீா் சோதனை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

குற்றச் சம்பவ பகுதிகள்: சென்னை - காட்பாடி - ஜோலாா்பேட்டை - சேலம் - கோயம்புத்தூா் வழித்தடம் உள்பட சில வழித்தடங்கள் குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 66 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இவற்றில் குற்றவாளிகளை அடையாளும் காணும் வகையில் ‘எஃப்ஆா்எஸ்’ தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை கேமராக்களை மேலும் சில முக்கிய பகுதிகளில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்களில் விரைந்து தண்டனை பெற்றுத்தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கல்லூரி மாணவா்கள்: இதேபோல ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் சில கல்லூரி மாணவா்களால் ஏற்படும் மோதல், அடிதடி செயல், வன்முறை ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், மோதல், அடிதடி, வன்முறை ஆகியவற்றில் ஈடுபடும் மாணவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக கல்லூரிகளில் விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளஷல் கிஷோா், ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஜி.எம்.ஈஸ்வரராவ், முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையா் பி.ராமகிருஷ்ணா, ரயில்வே காவல் துறை எஸ்.பி. ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க