செய்திகள் :

`ராக்கி கயிறு; சகோதரி’ - கணவன் கொலையில் பங்கு இருப்பதை ஒப்புக்கொண்ட சோனம்; சகோதரர் சொல்வதென்ன?

post image

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சியும், சோனம் என்பவரும் கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த 10 நாட்கள் கழித்த நிலையில் இரண்டு பேரும் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றனர். ஆனால் கடந்த மாதம் 23-ம் தேதி இருவரும் திடீரென காணாமல் போய்விட்டனர். அதனை தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது.

சோனம் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த 8-ம் தேதி சோனம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிப்பூர் போலீஸ் நிலையத்தில், `தனக்கு உடல் நிலை சரியில்லை’ என்று கூறி சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி இக்கொலையில் தொடர்புடைய சோனம் காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவிந்த், விபுல்

சோனமை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சோனம் தனது கணவன் கொலையில் தனக்கு பங்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுப்பது இந்திய சட்டப்படி செல்லுபடியாகும் என்றாலும், நீதிபதி முன்பு வாக்குமூலம் கொடுப்பதுதான் முறைப்படி செல்லுபடியாகும். போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துவிட்டு நீதிபதியிடம் வாக்குமூலத்தை மாற்றிக்கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. சோனம் இப்போது போலீஸாரிடம் தனது கணவன் கொலையில் தனக்கு பங்கு இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தனித்தனியே வந்த கொலையாளிகள்

ராஜாவை கொலை செய்த கூலிப்படையினர் ஆகாஷ், ஆனந்த், விகாஷ் ஆகியோர் ஒரே நேரத்தில் ஷில்லாங் செல்லாமல் தனித்தனியாக அங்கு போய் சேர்ந்துள்ளனர் என்று சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது. மூன்று பேரும் சோனம் மற்றும் ராஜாவுடன் சக சுற்றுலா பயணிகள் போல் ஒன்று சேர்ந்து கொண்டு அவர்களுடன் பயணம் செய்துள்ளனர். சோனமும், ராஜாவும் மலையில் 2000 படிக்கட்டுகள் ஏறிய நிலையில் கொலையாளிகள் மூன்று பேரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் சோனம் தனக்கு சோர்வாக இருப்பதாக கூறி மெதுவாக நடக்க ஆரம்பித்தார். குறிப்பிட்ட இடம் வந்ததும் பின்னால் இருந்து கொண்டு தனது கூட்டாளிகளிடம் கொலை செய்யும்படி உத்தரவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சோனம் மற்றும் கூலிப்படை
சோனம் மற்றும் கூலிப்படை

சோனம் சகோதரர் கோவிந்த் ராஜாவின் குடும்பத்தினரை சந்தித்து தங்களது சகோதரியை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கோவிந்த் அங்கு சென்ற போது ராஜாவின் தாயார் உமா அழுதபடி இருந்தார். அவரை கட்டியணைத்து கோவிந்த் ஆறுதல் கூறியபோது அவரும் அழுதார்.

பின்னர் கோவிந்த் கூறுகையில்,''நான் ராஜா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சோனத்துடனான உறவை எங்களது குடும்பம் துண்டித்துக்கொண்டுள்ளது. சோனம் குற்றவாளி என்றால் அவர் தூக்கிலிடப்படவேண்டும். ராஜ் குஷ்வாஹா எப்போதும் சோனத்தை சகோதரி என்றுதான் அழைப்பார். அதோடு ராஜ் மூன்று ஆண்டுகள் சோனத்திற்கு ராக்கி கயிறும் கட்டி இருக்கிறார். சோனம் எனக்கு போன் செய்து தான் ஹோட்டலில் நிற்பதாக அழுது கொண்டே தெரிவித்தார்.

உடனே நான் போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தேன். சோனத்தை ராஜாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் செய்தபோது சோனம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். ராஜாவுடன் இரண்டு மாதம் ஷாப்பிங் சென்றார். சோனம் எங்களது தாயாரிடம் ராஜ் குஷ்வாஹாவை காதலிப்பது குறித்து முன்கூட்டியே தெரிவித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை'' என்று தெரிவித்தார். இது குறித்து ராஜாவின் தாயார் உமா கூறுகையில், ''இதில் கோவிந்த் தரப்பில் எந்த வித தவறும் இல்லை. சோனத்தை தூக்கிலிட வேண்டும்" என்று கண்ணீர் விட்டு கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்..." - மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர்.சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல்... மேலும் பார்க்க

திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்கியது எப்படி?

திருச்சி, கே.கே.நகரில் உள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவர், தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில் உள்ள திருச்சி, கொட்டப்பட்டு கிராமம், அன்பில் நகரில் சுமார் 5920 சதுரடி உள்ள காலிமனைக்கு ... மேலும் பார்க்க

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சம் லஞ்சம்? - ஆசிரியர் புகார்... சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு!

வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிபிஐ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிரியர் ராமச்சந்திரன்வருமான வரி மோசடி புகார் தொ... மேலும் பார்க்க

திரிபுரா: இளைஞரைக் கொன்று ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்த நபர்; முக்கோண காதல் விவகாரத்தில் என்ன நடந்தது?

திரிபுரா மாநிலம் அகார்த்தலாவைச் சேர்ந்த சரிபுல் இஸ்லாம் (28) என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டார்.இது தொடர்பாக சரிபுல் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக... மேலும் பார்க்க

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65).இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற ... மேலும் பார்க்க

கோவில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் கைவரிசை; நகை திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட ஐவர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ளது உத்திரகோசமங்கை. உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 4-ம் தேதி நடந்தது.இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வ... மேலும் பார்க்க