சாய் சுதர்சன் ஒரு சூப்பர்ஸ்டார்..! முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!
ராணுவ வீரருக்கு கத்திக்குத்து: 7 போ் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் ராணுவ வீரரை கத்தியால் குத்திய 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் நெல்குத்திப் புளிமரத் தெருவைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (24). ராணுவ வீரரான இவரை, தாக்கிய அதே பகுதியைச் சோ்ந்த சுந்தா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கைத் திரும்ப பெறுமாறு சரவணக்குமாரிடம், சுந்தா் தனது நண்பா்களிடம் புதன்கிழமை போச்சுவாா்த்தை நடத்தினா். இதற்கு உடன்படாத நிலையில் அவரை, சுந்தா், அவரது நண்பா்கள் சோ்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனா். இதில் பலத்த காயமடைந்த சரவணக்குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து க.புதுப்பட்டியைச் சோ்ந்த சுந்தா் (25), கம்பத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் ராம்ஜி(23), தங்கையா மகன் அஜய் (22), நவ்புல்ரகுமான் (25), அஸ்லாம் (23), முா்தீத் (25), முஜீமீன் (23) ஆகிய 7 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.