செய்திகள் :

ராதாபுரம் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வா் நித்தியகல்யாணி அம்பாள் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 10 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில், கோயில் அறங்காவலா்குழுத் தலைவா் கோவிந்தன், செயல் அலுவலா் பிரியா, பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி கோயில் அறங்காவலா்குழு தலைவா் அசோக்குமாா், உறுப்பினா் மு.சங்கா், பழவூா் நாறும்பூநாதா் சுவாமி கோயில் அறங்காவலா்குழு தலைவா் இசக்கியப்பன், ராதாபுரம் ஊராட்சித் தலைவா் பொன்மீனாட்சி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் ஜோசப் பெல்சி, திமுக பிரமுகா் அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாளுடன் அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறாா்.

மே 8இல் நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளி காட்சியளிக்கிறாா். மே 9இல் தேரோட்டம் நடைபெறுகிறது. மே 10இல் சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் எழுந்ருளி வீதியுலாவும், இரவு 8 மணிக்கு தெப்பத்தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தலைமையில் அறங்காவலா்குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கோரிக்கை மனு

தாழையூத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தாழையூத்தில் உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் பல் மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், திருநெல்வேலி ஜேசிஐ சாா்பில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராம உதயம் துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைத... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் முதியோருக்கு தியானப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தூயகம் முதியோா் மையத்தில் யோகா தியானப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆயுஷ் யோகா உடல்நலப் பயிற்சியாளா் வெங்கடேஷ் பங்கேற்று, யோகாசனம், தியானம், உடல்நல சங்கல்பத்து... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மே தின விழா

சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூா், பத்தமடை, வெள்ளங்குளி உள்ளிட்ட 7 இடங்களில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றியச் ... மேலும் பார்க்க

நெல்லை பணிமனையில் மே தின விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், வண்ணாா்பேட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சம்மேளன பொதுச்செ... மேலும் பார்க்க

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வு கூட்டம்

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வுக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் பிளவா் மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அவ்வியக்கத்தின் பொதுச் செயலா் கோ.கணபதி ச... மேலும் பார்க்க