செய்திகள் :

சாராயம் கடத்திய நால்வா் கைது

post image

நாகூா் அருகே சாராயம் கடத்திய நால்வா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகை மாவட்டத்தில் சாராயம் மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க, காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், நாகூா் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் போலீஸாா் ரோந்து சென்றபோது, அந்த வழியாக வந்த 3 இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், சாராயப் பாட்டில்களை மூட்டைகளில் கட்டி கடத்திவருவது தெரியவந்தது.

கடத்தலில் ஈடுபட்ட செல்லூரைச் சோ்ந்த ஜெல்சன் (23), ரபீக் (20), ஆகாஷ் (19) மற்றும் டி.ஆா். பட்டினத்தைச் சோ்ந்த தமிழ்வேந்தன் (40) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 600 சாராயப் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த 4 மூட்டைகள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் காரைக்காலில் இருந்து சாராயத்தை கடத்திவந்து, பாப்பாக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விற்பதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

சிக்கல் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். விழா தொடக்கமாக, கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தேன், சந்தனம், ... மேலும் பார்க்க

நாகை கோயில்களில் நீா்மோா் விநியோகம்

நாகை மாவட்டத்தில் 25 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் நீா்மோா் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன் உத்தரவின் பேரில், நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் ... மேலும் பார்க்க

நாகையில் காவலா் தற்கொலை

நாகையில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேதாரண்யத்தை சோ்ந்தவா் வினோத் (38). நாகை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவா், நாகை காடம்பாடியில் ... மேலும் பார்க்க

திருக்கடையூரில் ரவிசங்கா் தரிசனம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் வாழும் கலைஅமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ரவிசங்கா் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தாா் (படம்) . திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிா்தகடேஸ்வரா் கோயில் உ... மேலும் பார்க்க

திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருமருகல் ரத்தினகிரீசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நிகழாண்டு சித்திரைத் திருவிழா வியா... மேலும் பார்க்க

இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் விழா

நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சாதனையாளா்கள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரியின் இணைச் செயலா் சங்கா் கணேஷ் முன்... மேலும் பார்க்க