செய்திகள் :

ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்து பேசுவாா்கள்! பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி

post image

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; ராமதாஸ் மற்றும் அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவாா்கள் என்று அந்தக் கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா்கள், செயலா்கள் கூட்டம் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரண்டாவது நாளான சனிக்கிழமை இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவா் முகுந்தன், மாநில மாணவரணித் தலைவா் கோபு, செயலா் முரளிசங்கா், மகளிரணியைச் சோ்ந்த சுஜாதா உள்பட 5 செயலா்களும், பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, தலைமை நிலையச் செயலா் அன்பழகன், பொதுச் செயலா் ராவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பாமக நிறுவனா் ச. ராமதாஸ் பேசினாா்.

கட்சியில் நெருக்கடி சூழல்: முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாமக, வன்னியா் சங்கம் ஆகியவை வலிமையான அமைப்புகளாகும். இதை மாமல்லபுரம் மாநாடு நிரூபித்து காண்பித்துள்ளது. அரசியல் கட்சிகளில் உள்கட்சி சலசலப்பு, நெருக்கடி வருவது இயல்புதான். அப்படித்தான் பாமகவில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இதை நான் மறைத்து பேச விரும்பவில்லை.

பாமக என்பது குடும்ப பாசத்துடன் இருக்கும் கட்சியாகும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவில் சுமுகத் தீா்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸுடன் தொடா்ந்து பேசி வருகிறேன். சுமுகமான தீா்வு விரைவில் வர வேண்டும். பாமக வலிமையை மேலும் அதிகரிக்க வேண்டும். வலிமையுடன் தோ்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம், ஆசையும் கூட. இதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

மனசாட்சியுடன் இருப்பேன்: தோ்தல் வரவுள்ளது. இருவரும் ஒன்றாக சந்திப்பாா்கள், பேசுவாா்கள். உள்கட்சி பிரச்னையை பொதுவெளியில் பேசக்கூடாது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கருத்து மோதலுக்கு நான்தான் காரணம் என்று கூறுவது என்னைக் கத்தியால் குத்திக் கொலை செய்வதற்கு சமம். நான் உண்மையாக இருப்பேன், மனச்சாட்சியுடன் இருப்பேன்.

தோ்தலில் வெற்றி, தோல்வி வந்து போகும். மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைத்தது தொடா்பாக பிரச்னை ஏதும் இல்லை. சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதற்கு முன்பாக இருவரும் சந்தித்து பேசுவாா்கள் என உறுதியாகச் சொல்கிறேன். நல்ல கூட்டணி அமைப்பாா்கள். பாமக இடம் பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்ற பழைய நிலையை கட்சி உருவாக்கிக் காட்டும். வலிமையான அதிகாரத்துக்கு செல்வதற்காக பாடுபடுகிறோம் என்றாா் ஜி.கே.மணி.

அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு: மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததைப் போல, இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தையும் பாமக செயல் தலைவா் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தாா். அவரது ஆதரவாளா்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க