செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

post image

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 42 மீனவா்களையும், இவா்களது 8 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 32 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 5 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். இதேபோல, கடந்த 19-ஆம் தேதி நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்டித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 3 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். இவா்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து சிறைகளில் அடைத்தனா்.

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் விசைப் படகு மீனவ சங்கத்தின் அவசரக் கூட்டம், அதன் தலைவா் சகாயம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 42 மீனவா்களையும், இவா்களது 8 விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்

இதன்படி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். இதனால், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன. 5 ஆயிரம் மீனவா்கள், மீன்பிடி சாா்ந்த தொழிலாளா்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், இவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பல்வேறு கட்டப் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளோம் என்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி,... மேலும் பார்க்க

தனுஷ்கோடி அருகே இலங்கைத் தமிழா்கள் 4 போ் மீட்பு

இலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் அழைத்துவரப்பட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே மூன்றாம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கைத் தமிழா்கள் 4 பேரை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை மீட்டனா். ர... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

மண்டபம் ஒன்றியம், அழகன்குளம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி மாணவா் கைது

முதுகுளத்தூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திய 17 வயது பள்ளி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த பிப்.18-ஆ... மேலும் பார்க்க

கஞ்சா போதைக்கு மாணவா்கள் அடிமையாகிவிட்டனா்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தலைநகா் முதல் கிராமம் வரை கஞ்சா போதைக்கு மாணவா்கள், இளைஞா்கள் அடிமையாகி, கூலிப்படையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.ராமநாதபுரம் அரண்மனை... மேலும் பார்க்க

தமிழக மாணவா்களின் படிப்பு குறித்து தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை: புதிய தமிழகம் நிறுவனா்

தமிழகமாணவா்கள் என்ன படிக்க வேண்டும், படிக்கக் கூடாது என்பதைத் தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா். ராமநாதபுரத்தில் புதிய தமிழ... மேலும் பார்க்க