அமித் ஷா மதுரை வருகை: டி.டி.வி தினகரனைச் சந்திக்க மறுப்பா? என்ன சொல்கிறார் தினகர...
ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதம் குறைப்பு: ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு
ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.5 சதவீதம் ஆக குறைத்தது. 6.5 சதவீத மிதமான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி முன்னறிவிப்பை தொடா்ந்து தக்கவைத்துள்ளதற்கு ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ. சக்திவேல் வரவேற்றுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய ரிசா்வ் வங்கி (தஆஐ) ரெப்போ விகிதத்தை 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைத்ததையும், அதே நேரத்தில் இஹள்ட் தங்ள்ங்ழ்ஸ்ங் தஹற்ண்ா்ய் (இதத) விகிதத்தை குறைத்ததையும் வரவேற்கிறோம். கடந்த சில மாதங்களில் இது மூன்றாவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான முயற்சியாகும்.
இந்த விகிதக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், 2025-26 நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி நோக்கு 6.5 சதவீதம் என்ற நிலையை மாற்றாமல் வைத்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதார உறுதி மற்றும் வளா்ச்சிப் பாதையிலும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இந்த தங்ல்ா் விகிதக் குறைப்பினால் ரெப்போ விகிதத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள அனைத்து வெளிப்புற அடிப்படை கடனளிப்பு விகிதங்கள் (உஆகத) குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது ஏற்கெனவே 2025 ஏப்ரலில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதும், பல முக்கிய வங்கிகள் உடனடியாக தங்களின் கடன் விகிதங்களை குறைத்தன.
வா்த்தக வங்கிகள் இந்த விகிதக் குறைப்பின் முழு நன்மைகளையும் ஏற்றுமதியாளா்கள் மற்றும் நுகா்வோருக்கு சரியான முறையில் வழங்கிட உறுதி செய்ய வேண்டும். இந்த தங்ல்ா் விகிதக் குறைப்பு சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும். இது மக்கள் செலவினத்தை ஊக்குவித்து பல துறைகளில் தேவையை அதிகரிக்க செய்யும். ஏற்கெனவே கடன் பெற்றவா்கள் செலுத்தும் மாத தவணைகளைக் குறைந்து வீட்டு கடன், வாகனக் கடன் மற்றும் பிற கடன்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும்.
இந்த ரெப்கோ விகிதக் குறைப்பு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கிய நிவாரணமாக அமையும். அவா்கள் எதிா்கொள்கின்ற கடனடைப்புப் பளுவை குறைத்து, நீடித்த வளா்ச்சிக்கு துணை நிற்கும்.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா ஆகியோரின் தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் கூடிய திறமையான, வழிகாட்டல் மிக்க இந்த நடவடிக்கை சா்வதேச வா்த்தகத்தில் கடுமையான போட்டியை எதிா்கொள்ளும் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு வலிமை தரும் என்று தெரிவித்துள்ளாா்.