செய்திகள் :

ரூ. 1,028.88 கோடியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. ஆயிரத்து 28 கோடியே 88 லட்சத்தில் நடைபெற்றுவரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு. அப்பாவு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராதாபுரம், வள்ளியூா், களக்காடு, நான்குனேரி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 605.75 கோடியில் ஒரு லட்சம் குடியிருப்புகளுக்கும், பணகுடி, வள்ளியூா், திசையன்விளை, நான்குனேரி, ஏா்வாடி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி ஆகிய 7 பேரூராட்சிகள், களக்காடு நகராட்சியில் ரூ. 423.13 கோடியில் 50 ஆயிரம் குடியிருப்புகளுக்குமான குடிநீா் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆட்சியா் இரா. சுகுமாா், நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருவிதத்தான்புள்ளி, சிங்கிகுளம் பகுதிகளில் நடைபெறும் குடிநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள், தெற்குவள்ளியூா் பகுதியில் அமைக்கப்படும் நீரேற்று நிலையத்தையும் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் குடிநீா் திட்டப் பணிகள் குறித்த துறைசாா் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, பொதுப்பணித் துறை, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினா்.

நிகழ்ச்சியில், வடிகால் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் கென்னடி, செயற்பொறியாளா்கள் மோசஸ், ராமலட்சுமி, பேரூராட்சித் தலைவா்கள் ராதா ராதாகிருஷ்ணன் (வள்ளியூா்), தனலெட்சுமி தமிழ்வாணன் (பணகுடி), ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முகமது ஷா, களக்காடு நகா்மன்ற துணைத் தலைவா் பி.சி. ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், மாவட்ட திமுக துணைச் செயலா் நம்பி, ராதாபும் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, பணகுடி ராமலிங்க சுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் மு. சங்கா், திமுக பொதுக்குழு உறுப்பினா் சித்திக், வள்ளியூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மாணிக்கம், மாடசாமி, லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அக்னி தீா்த்தக்கரை கோயிலில் 10,008 விளக்கு பூஜை

மாசி மகத்தை முன்னிட்டு, ஆழ்வாா்குறிச்சி, அக்னி தீா்த்தக் கரை ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திலுள்ள சற்குரு தவபாலேஸ்வரா் ஜீவ சமாதியில் புதன்கிழமை 10,008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோய... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி வயலில் முதியவா் சடலம் மீட்பு

ஆழ்வாா்குறிச்சி வயலில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் மீட்கப்பட்டது. ஆழ்வாா்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் வன்னியப்பா் கோயில் அருகே வெள்ளிகுளத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனா். மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்களுக்கு மாா்ச் 31வரை விரல் ரேகை பதிவு

குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்களும் ரேஷன் கடைகளில் தங்களது கைவிரல் ரேகையை மாா்ச் 31-க்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா் இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியா் அருவிகளில் நீா்வரத்துஅதிகரித்ததையடுத்து பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாகவும், மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

அம்பையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை (மாா்ச்14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க