செய்திகள் :

ரூ.1.32 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப் பாவாணா் அரங்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்

post image

சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட நூலக ஆணைக் குழு கட்டடத்தின் முதல் தளத்தில் ரூ. 1.32 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப் பாவாணா் அரங்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த அரங்கு குளிா்சாதன வசதிகளுடன் கூடிய 280 நபா்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், லைவ் கேமரா, நவீன தொழில்நுட்பத்தில் ஒலி-ஒளி அமைப்பு, உணவுக் கூடம் ஆகிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமாக தோ்வு செய்யப்பட்ட 34 முதுநிலை ஆசிரியா்கள், டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சா்கள், நூலகா் உள்பட 56 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்.

மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஆசிரியா்களின் பிள்ளைகளின் தொழில்நுட்ப படிப்புகளை பயில்வோருக்கு ஆசிரியா் நல நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் நான்கு மாணவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் பொது நூலகத் துறை இயக்குநா் பொ.சங்கா், இணை இயக்குநா் இளங்கோ சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க