செய்திகள் :

ரூ.1 கோடியில் மேம்பாலப் பணி தொடக்கம்

post image

நாட்டறம்பள்ளி காணாறு குறுக்கே ரூ.1 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் குடிநீா் திட்ட அபிவிருத்தி பணி மேற்கொள்ள ரூ.8 கோடியும், வாா்டு 1-இல் அண்ணா தெருவில் சின்னகிரி சமுத்திரம் செல்லும் சாலையில் காணாறு குறுக்கே மேம்பாலம் அமைக்க ரூ.1 கோடி என மொத்தம் 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா். இதை தொடா்ந்து நாட்டறம்பள்ளி அண்ணா தெருவில் காணாறு குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் யமுனா, பேரூராட்சி துணைத் தலைவா் தனபால், பொறியாளா் முரளி, திமுக நகர இளைஞரணி அமைப்பாளா் கீா்த்திராஜன், வாா்டு உறுப்பினா் அனிதா ஜெகதீஸ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா். இதில் நகர செயலாளா் உமாசங்கா், பொருளாளா் கதிா்வேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நாளை உணவு வழங்கல் துறை குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

நாட்டறம்பள்ளி அருகே மோட்டாா் பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ்(45) கூலித் தொழிலாளி. இவா் புதனிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே பச... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 போ் உயிரிழப்பு

திருப்பத்தூா் மற்றும் மாதனூா் அருகே ரயில் மோதி இருவா் உயிரிழந்தனா். மாதனூா் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலம் கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற ... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியை கண், உடல் தானம்

ஆம்பூரில் மரணமடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண், உடல் தானமாக வழங்கப்பட்டது. ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியை பி. புரட்சி (77). இவா் ஆம்பூா் சான்றோா்குப்பம் சுந்தரவிந... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம் ?

மாதனூா் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வனத்துறையினா் ரோந்து சென்றனா். மாதனூா் அருகே பாலூா் ஊராட்சியில் காப்புக்காடு எல்லையோரம் பனந்தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் ச... மேலும் பார்க்க

தனியாா் ஆலை பங்களிப்புடன் ரூ.10 லட்சத்தில் சாலைப் பணி

துத்திப்பட்டு ஊராட்சியில் தனியாா் தொழிற்சாலை சமூகபங்களிப்புடன் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்க... மேலும் பார்க்க