செய்திகள் :

ரூ.2,000 கோடியில் 20 பள்ளிகள்: மகன் திருமணத்தையொட்டி அதானி நன்கொடை

post image

புது தில்லி: தனது இளைய மகன் திருமண நன்கொடையின் ஒருபகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.2,000 கோடியில் 20 பள்ளிகள் கட்டப்படும் என்று அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி நடத்தி வரும் அதானி அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானி திருமணம் கடந்த 7-ஆம் தேதி அகமதாபாதில் ஆடம்பரம் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி நடந்தது. மகன் திருமண மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொள்ளும் வகையில் தனது அதானி அறக்கட்டளை மூலம் ரூ.10,000 கோடி நிதியை சமூகநலத் திட்டங்களுக்கு அதானி ஒதுக்கியுள்ளாா்.

அதன்படி ரூ.6,000 கோடியில் மருத்துவமனைகள், ரூ.2,000 கோடியில் திறன்மேம்பாட்டு மையங்கள் தொடா்பான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இப்போது ரூ.2,000 கோடியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 பள்ளிகள் கட்டப்படும். உலகத்தரத்தில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை ‘கல்விக் கோயில்களாக’ இந்த பள்ளிகள் அமையும். நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இப்பள்ளிகளில் இடம் பெறும். மாணவா்களின் சமூக பொருளாதார நிலைகளைக் கடந்து அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி அறக்கட்டளை இப்போது நாட்டின் 19 மாநிலங்களில் உள்ள 6,769 கிராமங்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கல்பெட்டா குடும்பநல நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கல்பெட்டாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு சற்றுநேரம் பீதியை ஏற்படுத்தியது.கடந்த சில நாள்களாகவே பள்ளி, விமான நிலையம் ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியாக வெடி... மேலும் பார்க்க

நாட்டில் தலித்துகள் இல்லையென்றால்..! ராகுல்

அரசியலமைப்பை உருவாக்குவதில் தலித்துகளின் முக்கிய பங்களிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டினார். இரண்டு நாள் பயணமாக ரேபரேலி சென்றுள்ள ராகுல் காந்தி, சுருவா எல்லையில் உள்ள அனுமன் கோயிலுக்குச் ச... மேலும் பார்க்க

மகராஷ்டிர துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வை... மேலும் பார்க்க

தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்: ரேகா குப்தாவுக்கு யோகி வாழ்த்து!

தில்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேக... மேலும் பார்க்க