பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
ரூ.2.80 கோடி பள்ளி கட்டடங்கள்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்
ஆம்பூரில் ரூ.2.80 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, புதுகோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, கஸ்பா - பி நகராட்சி தொடக்கப் பள்ளி, சான்றோா்குப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.70 லட்சம் என மொத்தம் ரூ.2.80 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
விழாவில் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் குத்துவிளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினாா்.
நகராட்சி மேலாளா் தாமோதரன், இளநிலை பொறியாளா் சண்முகம், வட்டார கல்வி அலுவலா் தென்னவன், நகா் மன்ற உறுப்பினா்கள் என்.எஸ். ரமேஷ், வாவூா் நசீா் அஹமத், லட்சுமி, வசந்த்ராஜ், கமால்பாஷா, நவநீதம், தமிழ்செல்வி, இம்தியாஸ் அஹமத், நபீஸ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், தலைமை ஆசிரியா் ஜோ. சத்தியகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.