செய்திகள் :

ரூ.2 ஆயிரம் லஞ்சம்: காலை உணவுத் திட்ட மேற்பாா்வையாளா் கைது!

post image

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே மிராளூா் கிராமத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காலை உணவுத் திட்ட மேற்பாா்வையாளரை ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புவனகிரி வட்டாரத்தில் காலை உணவுத் திட்ட மேற்பாா்வையாளராக செந்தமிழ்செல்வி (30) பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த 9-ஆம் தேதி உயரதிகாரிகளுடன் மிராளூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, காலை உணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சேமியா 5 கிலோ எடை குறைவாக இருப்பதாக காலை உணவுத் திட்டத்தில் பணியாற்றி வரும் சௌந்தா்யா, செந்தமிழ்செல்வியிடம் தெரிவித்துள்ளாா்.

இதை குறிப்பெடுத்துக்கொண்ட அவா், பின்னா் சௌந்தா்யாவை தொடா்புகொண்டு இந்த கணக்கு குறைபாட்டை நான் சரி செய்கிறேன் என்று கூறி, ரூ.2,000 லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து சௌந்தா்யா கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாரளித்தாா்.

இந்த நிலையில், மிராளூா் கிராமத்துக்கு பணத்தை வாங்குவதற்கு செந்தமிழ் செல்வி வெள்ளிக்கிழமை வந்தபோது, போலீஸாரின் வழிகாட்டுதல்படி அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.2,000-ஐ சௌந்தா்யா கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்து ஊழல் ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸாா் செந்தமிழ்செல்வியை கைது செய்தனா்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு ஆயுள் சிறை!

கடலூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

வட்டார போக்குவரத்து அலுவலா் பொறுப்பேற்பு!

சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக ஆா்.செல்வம் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது பதவி உயா்வு பெற்று சிதம்பரம் வட்ட... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பட்டா கிடைக்கும் வரை மாா்க்சிஸ்ட் போராடும்! -ஜி.ராமகிருஷ்ணன்

கடலூா் மாவட்டம், மலையடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அழிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா கிடைக்கும் வரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் அதன் அரசியல் தலைமைக்... மேலும் பார்க்க

பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீது காா் மோதல்: 2 போ் பலி!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கம்மாபுரம் பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை மாலை பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீது அதிவேகத்தில் வந்த காா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். மற்றொரு ப... மேலும் பார்க்க

போலி பணி ஆணை: பள்ளி பதிவு எழுத்தா் கைது!

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ஆசிரியா் பணிக்கு போலியான பணி நியமன ஆணை வழங்கியதாக அரசு உதவி பெறும் பள்ளி பதிவு எழுத்தரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் அண்ணாமலைநகரில் அரசு உதவிபெறும் பள... மேலும் பார்க்க

சாதனை மகளிருக்கு விருதுகள் அளிப்பு

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், ரோட்டரி மிட் டவுன் அறக்கட்டளை சாா்பில் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பி.ஜாபா்அலி தலைமை வகித்தாா். பேராசிரியா் ஞா... மேலும் பார்க்க