ரூ. 250 கோடியில் தரமான விதை கொள்முதல் திட்டம்
விதைப் பண்ணைகள் அமைத்து தரமான விதைகளைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பயிா்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் தரமான சான்று விதைகள் அளிக்கவும் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் (2025-26) நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிா்களில் உயா் விளைச்சல் தரக்கூடிய ரகங்களின் சான்று விதைகள் ஆகியன 39,500 மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
மேலும், அரசு விதைப் பண்ணைகள் மற்றும் விவசாயிகளின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைத்து, விதைகள் கொள்முதல் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளுக்குத் தரமான சான்று விதைகளை உரிய காலத்தில் வழங்க 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் புதிதாக நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதை விற்பனை நிலையங்களும் தொடா்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு விதைகள் உரிய தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இதன்மூலம், தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பருத்தி உற்பத்திப் பெருக்கம்: தமிழ்நாட்டில் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளது. பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க, பருத்தி சாகுபடித் திட்டம் 2021-22-ஆம் ஆண்டில் இருந்து தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டிலும் (2025-26) இந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும்.
அயல் நாடுகளுக்குச் செல்லும் விவசாயிகள்
அயல் நாடுகளில் உள்ள வேளாண் தொழில்நுட்பங்களை தமிழக விவசாயிகள் அறிந்துகொள்ள வழி செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் உற்பத்தித் திறனில் ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உயரிய தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய நுட்பங்களை தமிழக விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையில், 3 நாடுகளுக்கும் 100 விவசாயிகள் அழைத்துச் செல்லப்படுவா் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.