செய்திகள் :

ரூ.6 கோடி வரி ஏய்ப்பு - சிக்கிய பொள்ளாச்சி நகைக்கடை உரிமையாளர்!

post image

கோவை மாவட்டம், தங்க நகை உற்பத்திக்கு பிரபலமானது. பல தங்க நகை உற்பத்தியாளர்கள் நகைகளை உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், ஏராளமான நகைக்கடைகளும் உள்ளன.

நகை

இதில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் உள்ளது. அங்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் அவ்வபோது சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அப்படி நடத்தப்பட்ட சோதனையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வசமாக சிக்கியுள்ளது.

இதுகுறித்து கோவை ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள மொத்த, சில்லறை நகைக்கடைகளில் கடந்த பிப்ரவரி மாதம்1-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி வரை சோதனைகள் நடத்தப்பட்டன.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சட்டவிரோதமாக ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான ரசீது செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதற்காக அவர்கள் இரண்டு வகையான மென்பொருளை  பயன்படுத்தியுள்ளனர்.

ரூ.217 கோடி (305 கிலோ) மதிப்பிலான தங்க நகை வணிகத்தில் ரூ.6.53 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. கணக்கில் வராத 31கிலோ தங்கம், 409 கிலோ வெள்ளி கண்டறியப்பட்டது.” என்று கூறியுள்ளனர்.

பாண்டுரங்கன்

இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட பிஎஸ்பி ஜூவல்லரி உரிமையாளர் பாண்டுரங்கன் என்பவரை கைது செய்துள்ளனர். அவருக்கு வருகிற 10-ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்... சென்னையில் நடந்த கொடூரம்

சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவர... மேலும் பார்க்க

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இஸ்ரேல் சுற்றுலாப் பயணி; கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த இஸ்ரேல் பயணி உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக விடுதி உரிமையாளர் கர்நாடக மாநிலம் கொப்பல் காவல் நி... மேலும் பார்க்க

"பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர நடவடிக்கை வேண்டும்" -டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை

"சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான புகார் சதவிகிதம் தற்போது அதிகரித்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிரமாகப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழ்நாடு டி.ஜி.பி ... மேலும் பார்க்க

Kerala: பயணிகளை ஏற்றிச்சென்றதாக ஆட்டோ டிரைவர் அடித்து கொலை? தனியார் பஸ் ஊழியர்கள் மூவரிடம் விசாரணை

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாணூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப்(49). இவர் தனியார் பஸ்ஸுக்கு முன்னால் ஆட்டோவில் சென்று பஸ் ஸ்டாப்பில் உள்ள பயணிகளை ஏற்றிச் சென்றதாக கோடூர் பகுதியில் வைத்து த... மேலும் பார்க்க

மனைவி, மாமியார் சித்ரவதையால் தொழிலதிபர் விபரீத முடிவு... `பிணத்தைப் போல் வாழ்கிறேன்' -தாயார் கண்ணீர்

மனைவியின் துன்புறுத்தல் மற்றும் சித்ரவதை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நான்கு நாள்களுக்கு முன்புதான் மும்பையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் தனது மனைவியின் சித்ரவதை த... மேலும் பார்க்க

எட்டயபுரம் தாய், மகள் கொலை வழக்கு : காட்டிக் கொடுத்த சகோதரி; துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மேலநம்பிபுரத்தில் கடந்த 3-ம் தேதி தாய் சீதாலெட்சுமி, மகள் ராம ஜெயந்தி ஆகியோர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த தங... மேலும் பார்க்க