ரோகிணி பொறியியல் கல்லூரி சாா்பில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி
அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், தலைக்கவசம் உயிா்க்கவசம் என்ற விழிப்புணா்வுப் பேரணி கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் நீலமாா்த்தாண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீலவிஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கன்னியாகுமரி போக்குவரத்து காவல் அலுவலகம் எதிரே பேரணி தொடங்கி, விவேகானந்த கேந்திர வளாகத்தில் நிறைவடைந்தது. போக்குவரத்து உதவி ஆய்வாளா்கள் ஜெயபிரகாஷ், முத்துலட்சுமி ஆகியோா் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தனா். பேரணியில் போக்குவரத்து காவல் துறை போலீஸாா் மற்றும் ரோகிணி கல்லூரி மாணவா்கள் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வே.லோகநாதன் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.