ஏர் இந்தியா விமான விபத்து: விமானிகள் அறையின் குரல் பதிவுக் கருவி மீட்பு!
ஆட்டோ ஓட்டுநா் மா்மமாக உயிரிழப்பு
கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் மா்மாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பள்ளியாடி ஆலன்கீழத்தட்டுவிளை பகுதியை சோ்ந்தவா் மனோஜ் (50). அப்பகுதியில் ஆட்டோ ஓட்டிவந்தாா். இந்நிலையில், எட்டணி பகுதியில் தன் ஆட்டோவின் பின் இருக்கையில் மனோஜ் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தாராம்.
இதனைக் கண்ட அப்பகுதியினா், கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், மனோஜ் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.