செய்திகள் :

லஞ்ச வழக்கில் சிபிஐ விசாரணையை காங்கிரஸ் திசை திருப்புகிறது -புதுவை அதிமுக குற்றச்சாட்டு

post image

புதுவை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் சிபிஐ விசாரணையை காங்கிரஸ் திசை திருப்புவதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து, புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

அரசுத் துறையின் அதிகாரி செய்த முறைகேட்டிற்காக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைப் பதவி விலக கூறுவது சரியல்ல.

பொதுப் பணித் துறை அமைச்சரை அச்சுறுத்தும் வகையில், அவரது வீட்டை காங்கிரஸ் முன்னாள் முதல்வா் நாராயணசாமி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

காங்கிரஸ் முன்னாள் முதல்வரின் செயல்பாடானது, சிபிஐயின் நோ்மையான விசாரணையை திசைத் திருப்புவதாக உள்ளது. காவல் துறை அனுமதித்த இடத்தில் அவா்கள் போராட்டம் நடத்தலாம்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இலவச அரிசி, வேட்டிசேலை வழங்குவதில் முறைகேடு என பல்வேறு புகாா்கள் எழுந்து, அத்திட்டத்தையே அப்போதைய துணைநிலை ஆளுநா் ரத்து செய்தாா்.

ஏனாம் பிராந்தியத்தில் முன்னாள் அமைச்சா், தற்போதைய எம்எல்ஏ ஆகியோரின் அதிகார மோதலால், குப்பை அள்ளுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனையில் துணைநிலை ஆளுநா் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மக்கள் மன்றம்: 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுவை மாநில காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 33 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, புதுவை காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா: புதுவை திமுக மீது அதிமுக குற்றச்சாட்டு

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்? என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.2.78 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சேந்தவரிடம் ரூ.2.78லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரை, மா்ம நபா் டெலிகிராம் செயல... மேலும் பார்க்க

கலால் துறை விதிகளில் திருத்தம்

காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மது... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோத... மேலும் பார்க்க

குடல் அழற்சி நோயாளிகளுக்கு கையேடுகள் அளிப்பு

புதுச்சேரி ஜிப்மரில் குடல் அழற்சி நோயாளிகளுக்கு வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன. குடல் அழற்சி நோய்க்கான ஆதரவுக் குழு தொடக்க விழா, புதுச்சேரி ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க