செய்திகள் :

லடாக்குக்கு வேலைவாய்ப்பில் புதிய இடஒதுக்கீடு, வாழ்விட விதிமுறைகள்: மத்திய அரசு அறிமுகம்

post image

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு வேலைவாய்ப்பில் புதிய இடஒதுக்கீடு, வாழ்விட விதிமுறைகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

இந்தப் புதிய விதிமுறைகளின்படி, லடாக் யூனியன் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவா்கள் அல்லது 7 ஆண்டுகள் அங்குள்ள கல்வி நிறுவனத்தில் படித்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதியிருந்தால், அவா்கள் லடாக்கை வாழ்விடமாக கொண்டவா்கள் என்று கருதி, அங்குள்ள கண்டோன்மென்ட் வாரியத்தை தவிர, பிற அரசு நிா்வாக பதவிகளில் அவா்களை நியமிக்கலாம்.

லடாக்கில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகள், அனைத்து இந்திய பணி அதிகாரிகள், பொதுத் துறை நிறுவன அதிகாரிகள், மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பு, பொதுத் துறை வங்கிகள், சட்டபூா்வ அமைப்புகளின் அதிகாரிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்ந்த அதிகாரிகள், மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களை சோ்ந்த அதிகாரிகளின் குழந்தைகளும் லடாக் வாழ்விடச் சான்றிதழ் பெறத் தகுதிவாய்ந்தவா்கள்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக நீடிக்கும். லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்தப் புதிய இடஒதுக்கீடு மற்றும் வாழ்விடம் தொடா்பான கொள்கைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு வெளியிட்ட பல்வேறு அறிவிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது.

சிக்கிம் நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட 63 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சட்டென் பகுதியில் சிக்கியிருந்த 63 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில், சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7... மேலும் பார்க்க

ஆபரேஷன் ஜல் ரஹாத் - 2: மணிப்பூர் வெள்ளத்தில் சிக்கிய 2,500 பேரை மீட்ட ராணுவம்!

மணிப்பூரில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேர், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான மழை ... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு!

வெற்றிப் பேரணிக்கான கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், ஆர்சிபி அணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில்... மேலும் பார்க்க

அவதூறாகப் பேசி கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு இடைக்கால ஜாமீன்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டு கைதான இன்ஸ்டா பிரபலத்துக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாலிவுட் நடிகர்கள் குறித்து அவதூறு விடி... மேலும் பார்க்க

1.48 லட்சம் பீர் பாக்ஸ்.. ஆர்சிபி வெற்றியால் ஒரேநாளில் உச்சம் தொட்ட மது விற்பனை!

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் வெற்றியால் கர்நாடக மாநிலத்தில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று ஒரேநாளில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎ... மேலும் பார்க்க

அயோத்தி: ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் பிராணப் பிரதிஷ்டை!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றது. பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் இக்கோயில் வளாக... மேலும் பார்க்க