செய்திகள் :

லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்: உ.பி. முதல்வர்

post image

லக்னௌ : லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

லக்னௌ நகரில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோர் மாநாட்டில் முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை(பிப். 17) பங்கேற்று உரையாற்றினாா்.

அப்போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடி அளித்த உத்வேகத்தால் கடந்த 2018-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தை அமல்படுத்தினோம். அதன்கிழ், மாநிலத்தின் குறு, சிறு நிறுவன தயாரிப்புகளை இணைத்துள்ளோம். அந்தவகையில், மாவட்டந்தோறும் ஒரு பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, ஹோலி, தசரா மற்றும் பிற பண்டிகைகள் வரும் காலங்களில் சீனாவிலிருந்து வரும் பொருள்கள் இந்திய சந்தைகளை மூழ்கடித்திருந்த நிலையில், இன்று, ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ முன்னெடுப்பு காரணமாக வரும் பொருள்களால் மக்கள் அவற்றையே வாங்கி பிறருக்கு பரிசளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பெருமிதமும் கொள்கின்றனர்.

நமது ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. லட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்குவதில் நாங்கள் சாதித்துக் காட்டியுள்ளோம்” என்றார்.

முதலாளித்துவத்தை ஊக்குவிக்கும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு உண்மையான பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இரண்டு நாள் பயணமாக... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!

27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன. தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேக... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மார்ச் 8-க்குள் ரூ.2,500: ரேகா குப்தா

பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 2,500 மார்ச் 8-ம் தேதிக்குள் முதல் தவணையாக வழங்கப்படும் என்று தில்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா தெரி... மேலும் பார்க்க

ரேபரேலியில் ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இரண்டு நாள் பயணமாகத் தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி இன்று காலை ரேபரேலிக்கு வந்தடைந்தார்.... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் விசாரணைக்கு தடை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது.தனியாா் நிறுவனத்தின் மீதான வழக்கில் நிறுவனத்துக்கு சாதகமா... மேலும் பார்க்க

கும்பமேளா நீரை யோகி ஆதித்யநாத் குடிப்பாரா? பிரசாந்த் பூஷண் சவால்!

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரைப் பொது இடத்தில் வைத்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடிப்பாரா என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சவால் விடுத்துள்ளார்.மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பம... மேலும் பார்க்க