லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டாா்.
இதில், அவா் நடேசன் நகரைச் சோ்ந்த கண்ணையன் மகன் காளிமுத்து (27) என்பதும், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.