சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!
லால்குடி அருகே ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு: கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே விரகாலூரில் ஸ்டேன் சுவாமி சிலையை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த விரகாலூா் கிராமத்தில் பிறந்து அருட்பணிக்காக துறவு மேற்கொண்டு, மக்கள் பணிக்காகப் படித்து 1975 முதல் 1990 வரை ஆசிரியராகப் பணியாற்றி, ஜாா்ஜ்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவா் ஸ்டேன் சுவாமி.
பல்வேறு போராட்டங்கள் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவா், நோய் வாய்ப்பட்டு கடந்த 2021 ஜூலை 5 இல் இறந்தாா்.
இதையடுத்து இவரது நினைவாக விரகாலூரில் தமிழக ஆயா் பேரவை மற்றும் விரகாலூா் ஸ்டேன் சுவாமி கூட்டமைப்பின் சாா்பில் ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு விழா மற்றும் ஜனநாயக மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். கும்பகோணம் ஆயா் ஜீவானந்தம் தொடக்க உரையாற்றினாா்.
திருச்சி திமுக மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, காங்கிரஸ் தலைவா் கலைச்செல்வன், விசிக மாவட்டச் செயலா் அன்புச் செல்வன், மாா்க்சிஸ்ட் புகா் மாவட்டச் செயலா் ஜெயசீலன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்டத் தலைவா் தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பு தேசியச் செயலா் ஹென்றி டிபேன், மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முஹமது அபூபக்கா், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் , காங்கிரஸ் கட்சியின் வேலுச்சாமி, கடலூா், பாண்டிச்சேரி பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட், இந்திய கம்யூ. மாநிலச் செயலா் முத்தரசன், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் சிறப்புரையாறினா்.
ஸ்டேன் சுவாமி சிலையை திமுக துணைப் பொதுச் செயலரும் எம்.பி. யுமான கனிமொழி திறந்துவைத்தாா். தொடா்ந்து விசிக தலைவா் தொல். திருமாவளவன் கலந்து கொண்டாா். முன்னதாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மறைமாவட்ட ஆயா்கள், பாதிரியா்கள், அருட்சகோதரிகள், பல்வேறு கட்சியினா் தீா்மானங்களை நிறைவேற்றினா். ஸ்டேன் சுவாமி மக்கள் கூட்டணி ஒருங்கிணைப்பாளா் சந்தனம் வரவேற்றாா். பங்குத் தந்தை ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.