செய்திகள் :

``வ.உ.சி-யின் சுதேசி கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி'' - எல்.முருகன்

post image

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ம் தேதியன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பா‌.ஜ.க சார்பில் நாடு முழுவதும் 'ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய கொடி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்ற இந்த யாத்திரையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார். பா‌.ஜ.க மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ஏ.டி.சி வரை தேசிய கொடிகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

ஏ.டி.சி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய எல். முருகன், "பாரத பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சியில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலைய விரிவாக்கங்கள் நடைபெற்று வருகின்றன. செய்தித்தாள்களிலும் சினிமாவிலும் நாம் பார்த்து வந்த புல்லட் ட்ரெயின் இன்றைக்கு நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றால், அதற்கு நம்முடைய பிரதமர் தான் காரணம். உள்நாட்டு தயாரிப்புகளை அதிகப்படுத்தி சுயசார்பு பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஐயா வ.உ.சி அவர்களின் கனவாக இருந்தது.

எல். முருகன்

அந்த சுதேசி கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி அவர்கள். அதற்கு ஒரே எடுத்துகாட்டாக இருக்கிறது ஆப்ரேஷன் சிந்தூர். உள்நாட்டு ராணுவ தயாரிப்புகள் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உரிய பாடம் புகட்டப்பட்டது‌. நாட்டின் 100 - வது சுதந்திர தினம் கொண்டாடும் போது உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக நம் நாடு இருக்கும் " என்றார்.

``வயது முதிர்வால் அல்ல; துறை உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்'' - TVK ஆனந்த்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சார்பில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க

``ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார்? நான் FIR பதிவு செய்வது அழகல்ல'' - எம்.பி கபில் சிபல்

முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் பதவி விலகலுக்கு பின்னர் அவரது இருப்பிடம் குறித்து எம்.பி. கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ’... மேலும் பார்க்க

Moringa Leaves: தலைமுடி உதிர்தல் முதல் மூட்டுவலி வரை சரியாக்கும் முருங்கைக்கீரை!

சிக்குரு, கிரஞ்சம், கிழவீ, சோபாஞ்சனம் எனப் பல பெயர்களைக் கொண்ட முருங்கை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லலாம். இதன் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் கு... மேலும் பார்க்க

``திராவிட மாடல் 2.0; நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்'' - மு.க.ஸ்டாலின்

தாம்பரத்தில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பட்டா வழங்கும் விழாவில்... மேலும் பார்க்க

``சாலை ஓரத்தில் அல்ல; பட்டா நிலத்தில் மட்டுமே கட்சி கொடி கம்பங்கள்'' - குமரியை பின்பற்றுமா தமிழகம்?

தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், சாதி கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகிவிடுமா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு கடந்த 2-3 வாரங்களாகவே சரியான தூக்கமில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள்தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். இன்று பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைக் கேள்விப்ப... மேலும் பார்க்க