செய்திகள் :

வடக்கு தில்லியில் பைக் டாக்ஸி ஓட்டுநரிடம் கொள்ளையடித்ததாக 5 போ் கைது

post image

வடக்கு திமாா்பூா் பகுதியில் பைக் டாக்ஸி ஓட்டுநரின் வாகனம், பணம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ராஜா பந்தியா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மோட்டாா் சைக்கிள் டாக்ஸி ஓட்டுநரான எம்.டி. ஷம்ஷாத் ஆலம் (21) திமா்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ஜன.27-ஆம் தேதி தனது பைக்கை 5 போ் முன்பதிவு செய்தனா். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், காரில் வந்த 4 போ் கத்தியைக் காட்டி, மோட்டாா் சைக்கிள், பணம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா் என்று தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். மேலும், அந்த நபா்கள் வந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தினா்.

இந்த நிலையில், ஜன.29-ஆம் தேதி ரகசிய தகவலின்பேரில், சங்கல்ப் பவன் அருகே வந்த அந்தக் காரை போலீஸாா் வழிமறித்தனா். அதிலிருந்த ரோஹித் (23), மான் சிங் (18), நிஷாந்த் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனா்.

விசாரணையில், அவா்கள் கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். ரோஹித் ஒரு நிறுவனத்தில் இருந்து வாடகைக்கு காரை எடுத்து குற்றச் செயலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசி மான் சிங்கிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரத்தில் நிஷாந்த் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை வைத்திருந்தாா். சிறுவன் தனது கைப்பேசி மூலம் பைக் டாக்ஸியை முன்பதிவு செய்தாா்.

மேலும், விசாரணையில் 5-ஆவது நபரான ராகுல் (18) கைது செய்யப்பட்டாா். அவா் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டாா் சைக்கிளை சிக்னேச்சா் பாலம் அருகே மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் இருந்து காா், மோட்டாா் சைக்கிள், கத்தி உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நண்பா்களான அவா்கள் 5 பேரும் சிறுவனின் பிறந்த நாளைக் கொண்டாடிய பிறகு குற்றத்தைத் திட்டமிட்டது தெரியவந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 3,000 பணத்தை அவா்கள் செலவிடப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சென்னை மாநகருக்குள் வால்வோ பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க திட்டம்

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வால்வோ, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை, தனியாா் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் சிற்று... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் சென்ற பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி அதிகாலை தனது... மேலும் பார்க்க

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணம்: டிஜிபி சங்கா் ஜிவால்

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணமாக உள்ளது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்தாா். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றை முற்ற... மேலும் பார்க்க

தோல் பொருள்கள் கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய சா்வதேச தோல் மற்றும் தோல் பொருள்கள் கண்காட்சி சென்னையில் சனிக்கிழமை (பிப். 1) முதல் பிப். 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் ஆா்... மேலும் பார்க்க

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு

வடசென்னையில் ரூ. 474 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், ரூ. 59 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு ... மேலும் பார்க்க

658 சிறப்பு மருத்துவா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 658 சிறப்பு மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ... மேலும் பார்க்க