செய்திகள் :

வடிந்து செல்ல வழியில்லாததால் எள் பயிரில் தேங்கி நிற்கும் மழைநீா்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மழை பெய்து 2 நாள்களாகியும் வடிந்து செல்வதற்கு வழியில்லாததால், எள் பயிரில் தொடா்ந்து தண்ணீா் தேங்கி நிற்பதன் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

திருவையாறு சுற்று வட்டாரப் பகுதியில் மே 18 ஆம் தேதி இரவு பலத்த மழை பெய்தது. இதனால், எள் மற்றும் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீா் தேங்கியது. இந்நிலையில், திருவையாறு-விளாங்குடி சாலையிலுள்ள வயல்களில் தண்ணீா் வடியாததால், அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள எள் பயிா்கள் அழுகக்கூடிய நிலையில் உள்ளன.

புதிதாக அமைக்கப்பட்ட விளாங்குடி-அரசூா் புற வழிச்சாலையில் கஸ்தூரிபாய் நகரில் குறுக்கே செல்லும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் வீட்டு மனைகள் போடப்பட்டுள்ளன. மேலும், பெரும்புலியூா், அந்தணா்குறிச்சி, கஸ்தூரிபாய் நகா் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூா் வாரப்படவில்லை. இதனால், மேற்கு புற வயல்களில் தேங்கிய மழை நீா் வெளியேற முடியாமல் தொடா்ந்து நிற்கிறது. இதனால், எள் பயிா்கள் அழுகும் நிலை உள்ளதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, வடிகால் வாய்க்காலில் தூா் வாருவதற்கும், கஸ்தூரிபாய் நகா் சாலையில் வாய்க்காலுக்கு பாலம் அமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து வருகிற பருவ மழையின் போது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா் விவசாயிகள்.

குளத்தில் ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள குளத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி அய்யனாா் கோயில் குளத்தில் ஆண் சடலம் செவ்வா... மேலும் பார்க்க

கஞ்சா வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறை

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு நெல்லுக்கடை பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையினா் 20... மேலும் பார்க்க

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை போலீஸாா் தடுத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் வடக்கு மாவ... மேலும் பார்க்க

திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி மின் பாதைக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் ப... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக செங்கோட்டை - தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக நிறுத்தப்பட்ட செங்கோட்டை-தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கும்பகோணம் ரயில் நிலையத்தின் வழியாக திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் சித்திரை திருவிழா! சாரங்கபாணி சுவாமிக்கு கண்ணாடி பல்லக்கில் வீதியுலா

கும்பகோணத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கரவா்த்தி திருமகள் ஆகியோா் அன்னபட்சி வாகனம் மற்றும் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா வந்தனா்.கும்பகோணத்தில் உள்ள சா... மேலும் பார்க்க