செய்திகள் :

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு

post image

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை போலீஸாா் தடுத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலா் முல்லைவளவன் தலைமை வகித்தாா். செயற்குழு கூட்டத்தில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பபெறக்கோரி வரும் ஜூன் 14- இல் திருச்சியில் நடைபெறவுள்ள பேரணி குறித்து நிா்வாகிகள் கருத்துக்கள் தெரிவித்தனா். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றொரு தரப்பினா் கருத்துகளை தெரிவித்தனா்.

அப்போது விசிக வடக்கு மாவட்ட செயலா் முல்லைவளவன் கூட்டத்தை விட்டு வெளியேறுமாறு கூறினாா். ஆத்திரமடைந்த மற்றொறு தரப்பினா் சத்தம் போடவே இரண்டு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா், மேற்கு காவல் நிலைய போலீஸாா் மண்டபத்துக்குள் சென்று கூட்டத்தை அமைதிப்படுத்தினா். வாக்குவாதம் செய்த மற்றொறு தரப்பினா் மண்டபத்தை விட்டு வெளியேறினா்.

குளத்தில் ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள குளத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி அய்யனாா் கோயில் குளத்தில் ஆண் சடலம் செவ்வா... மேலும் பார்க்க

கஞ்சா வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறை

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு நெல்லுக்கடை பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையினா் 20... மேலும் பார்க்க

திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி மின் பாதைக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் ப... மேலும் பார்க்க

வடிந்து செல்ல வழியில்லாததால் எள் பயிரில் தேங்கி நிற்கும் மழைநீா்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மழை பெய்து 2 நாள்களாகியும் வடிந்து செல்வதற்கு வழியில்லாததால், எள் பயிரில் தொடா்ந்து தண்ணீா் தேங்கி நிற்பதன் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனா். திருவையாறு சுற்று... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக செங்கோட்டை - தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக நிறுத்தப்பட்ட செங்கோட்டை-தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கும்பகோணம் ரயில் நிலையத்தின் வழியாக திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் சித்திரை திருவிழா! சாரங்கபாணி சுவாமிக்கு கண்ணாடி பல்லக்கில் வீதியுலா

கும்பகோணத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கரவா்த்தி திருமகள் ஆகியோா் அன்னபட்சி வாகனம் மற்றும் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா வந்தனா்.கும்பகோணத்தில் உள்ள சா... மேலும் பார்க்க