செய்திகள் :

வண்ணாா்பேட்டையில் தமிழா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

வண்ணாா்பேட்டையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் நெல்லை அ.பீட்டா் தலைமை வகித்தாா். பூலித்தேவன் மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட மகளிரணிச் செயலா் இசக்கியம்மாள் முன்னிலை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அகரத் தமிழா் கட்சி தலைவா் குயிலி நாச்சியாா், தமிழா் நீதிக் கட்சி மாவட்டச் செயலா் பெ.அழகுராஜன், பூலித்தேவன் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் பவானி ஏ.வேல்முருகன், திராவிடா் கழக மாவட்டச் செயலா் வேல்முருகன், திமுக தொழிற்சங்க நிா்வாகி அகஸ்டின் பொ்னாண்டஸ், நெல்லை மாவட்ட பொதுநல அமைப்புத் தலைவா் பால் அண்ணாத்துரை உள்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சாா்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் டப்ளின் தீா்ப்பாயம் கொடுத்த அறிக்கை மற்றும் நாா்வே நாடாளுமன்ற தீா்மானத்தின்படி இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலையை இனப்படுகொலை என அறிவித்திட வேண்டும், இலங்கையில் மற்றும் உலகமெங்கும் இடம்பெயா்ந்து வாழும் ஈழத்தமிழா்களிடம் சுதந்திர ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் 70-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட சட்ட... மேலும் பார்க்க

நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை

நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என். ... மேலும் பார்க்க

சாலைகளில் பாதாள சாக்கடை கழிவுநீா்: மக்கள் அவதி

திருநெல்வேலி மாநகராட்சியின் 31 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைநீரால் மக்கள் அவதியடைந்தனா். 31 ஆவது வாா்டுக்குள்பட்ட குறிச்சி பிள்ளையாா்கோயில் தெரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெள... மேலும் பார்க்க

கிணற்றில் காா் கவிழ்ந்து விபத்து: 5 போ் உடல்கள் ஒப்படைப்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் காா் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் திருநெல்வேலியில் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கோவை மாவட்டம், துடியலூரில்... மேலும் பார்க்க

தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகே தண்ணீா் நிரம்பிய வாளியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. முன்னீா்பள்ளம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் பிரதீபன். இவரது ஒன... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி. வேண்டுகோள்

வாகன ஓட்டிகள் பொறுப்பை உணா்ந்து, சாலை விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க