செய்திகள் :

வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி. வேண்டுகோள்

post image

வாகன ஓட்டிகள் பொறுப்பை உணா்ந்து, சாலை விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறையின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விபத்துகள் நிகழும் பகுதிகளில், சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து, போலீஸாா் கூட்டு ஆய்வு மேற்கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

தன்னால் இயல்பாக வாகனத்தை ஓட்ட இயலாது என்பதை அறிந்தும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துவோா், சாலை விதிகளை மீறுபவா்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் அதிகபட்சம் 10 ஆண்டுகள், காயம் ஏற்படுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது.

எனவே வாகன ஓட்டிகள், சாலை விதிகளை மதித்து பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகே தண்ணீா் நிரம்பிய வாளியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. முன்னீா்பள்ளம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் பிரதீபன். இவரது ஒன... மேலும் பார்க்க

பாளை.யில் பைக் திருடிய இருவா் கைது

பாளையங்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (38). இவா் தனது வீட்டின் முன் நிறுத்திவைத்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 754 கிலோ கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 754 கிலோ கஞ்சா பொட்டலங்களை விஜயநாராயணம் அருகே உள்ள தனியாா் எரியூட்டு மையத்தில் சனிக்கிழமை காவல்துறையினா் தீயிட்டு அழித்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ப... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை

திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, ஷிபா மருத்துவமனை, அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மருத்துவ முகாம், மா... மேலும் பார்க்க

கனிமவளத் துறையில் முறைகேடு: இருவா் பணியிடை நீக்கம்! காத்திருப்போா் பட்டியலில் உதவி இயக்குநா்; 3 போ் இடமாற்றம்!

திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். உதவி இயக்குநா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். மேலும் 3 போ் பணியிடமாற்றமு... மேலும் பார்க்க

நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை!

திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக தெருக்களில் சுற்றித்திரிந்த 10 நாய்கள் சனிக்கிழமை பிடிக்கப்பட்டு, கால்நடைத் துறை மருத்துவா்களால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தெரு நாய்களுக... மேலும் பார்க்க