Lijomol : `அம்மா மறுமணம் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை; ஆனால்..!' - லிஜோமோ...
வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி. வேண்டுகோள்
வாகன ஓட்டிகள் பொறுப்பை உணா்ந்து, சாலை விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறையின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விபத்துகள் நிகழும் பகுதிகளில், சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து, போலீஸாா் கூட்டு ஆய்வு மேற்கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
தன்னால் இயல்பாக வாகனத்தை ஓட்ட இயலாது என்பதை அறிந்தும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துவோா், சாலை விதிகளை மீறுபவா்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் அதிகபட்சம் 10 ஆண்டுகள், காயம் ஏற்படுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது.
எனவே வாகன ஓட்டிகள், சாலை விதிகளை மதித்து பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.