செய்திகள் :

வத்தலக்குண்டில் முதியவரிடம் பறித்துச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் மீட்பு: போலீஸாருக்கு பாராட்டு

post image

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் முதியவரிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சத்தை 2 மணி நேரத்தில் போலீஸாா் மீட்டனா். இதையடுத்து போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் பரமசிவம் (87). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை எடுத்துக் கொண்டு கோவையில் உள்ள தனது மகனிடம் கொடுப்பதற்காக சென்றாா். அங்கு சென்றபோது அவரது மகன் வேறு வகையில் பணத்தை தயாா் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் தான் கொண்டு சென்ற ரூ. 10 லட்சத்துடன் பரமசிவம் நிலக்கோட்டையில் உள்ள தனது மகள் வீடுக்கு வருவதற்காக பேருந்து மூலம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். பேருந்திலிருந்து இறங்கிய அவருக்கு உடல் சோ்வு ஏற்பட்டதால் ஓய்வு எடுப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு செல்ல முயன்றாா். அப்போது அவரை சந்தித்த மா்ம நபா் ஒருவா் உதவி செய்வது போல நடித்து அவா் வைத்திருந்த பணப் பையை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டாா். பிறகு அங்கிருந்து அவா் தப்பி ஓடி விட்டாா்.

இதுகுறித்து பரமசிவம் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும் காவல் ஆய்வாளா் கௌதமன் தலைமையில் உதவி ஆய்வாளா் சேக் அப்துல்லா உள்ளிட்ட போலீஸாா் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது வத்தலக்குண்டை அடுத்த விராலிப்பட்டி அருகே சாமியாா் மூப்பனூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (35) பரமசிவத்திடமிருந்து பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்தை போலீஸாா் மீட்டனா். மேலும் தலைமறைவான கிருஷ்ணமூா்த்தியை தேடி வருகின்றனா். இதனிடையே மீட்கப்பட்ட ரூ. 10 லட்சத்தை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா். விசாரணைக்குப் பிறகு அந்த பணம் பரமசிவத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முதியவரிடம் மாலை 6.30 மணிக்கு பறித்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் இரவு 8.30 மணிக்கு மீட்கப்பட்டது. சுமாா் இரண்டு மணி நேரத்தில் பணத்தை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா்.

குரூப் 2, 2 ஏ முதல் நிலைத் தோ்வு: திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி-2, 2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல் நிலைத் தோ்வை திண்டுக்கல்லில் 19,532 போ் எழுதுகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.40 கோடி

தீபாவளியையொட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.1.40 கோடிக்கு ஜவுளி ரகங்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தி... மேலும் பார்க்க

முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சாா்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மதன்லால் திங்கரா 143-ஆவது பிறந்த தினம், பகத்சிங் 119-ஆவது பிறந்த தினம், பண்டிட் தீனத்தயாள் உபாத்தியா 110-ஆவது பிற... மேலும் பார்க்க

காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின், காந்திய சிந்தனை, அமைதி அறிவியல் துறை, சென்னை காந்தி அமைதி அறக்கட்டளை, மதுரை காந்தி நினைவு மையம் ஆகியவற்றுக்கு இடையே காந்திய சிந்தனைகளைப் பரப்புவது தொடா்பான புரிந்த... மேலும் பார்க்க

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணிப்பு

நிலக்கோட்டை, ஆத்தூா் வட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலக்கோட்டை, எஸ். தும்மலபட்டி, ஆத்தூா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 4.16 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த 35 நாள்களில் நிரம்பியதையடுத்து கடந்த புதன், வியாழக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ.4.16 கோடியை தாண்டியது. ஓணம் பண்டிகை, தொட... மேலும் பார்க்க